உலக மகளிர் தினம் - கோவையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் ஊடகவியலாளர்கள்!

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் பெண் ஊடகவியலாளர்கள், கோவை பிரஸ் கிளப் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆண் ஊடகவியலாளர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.


கோவை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊடகவியலாளர்களும், அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...