தாராபுரத்தில் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் - 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு!

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மாநாடு, சென்னையில் வரும் 14ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க கோரியும் தாராபுரத்தில் சிபிஎம் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.


திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மார்ச் 14ஆம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும் 10 அம்ச கோரிக்கைகள் குறித்தும் தாராபுரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

அப்போது, அரசு போக்குவரத்தை பலப்படுத்தவும், பாதுகாத்து வரவும் செலவுக்கு இடைப்பட்ட தொகையை ஈடுகட்ட தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வாங்கிட வேண்டும், பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்ய உதவி பாகங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகை 10,000 கோடியை அரசு திரும்ப வழங்க வேண்டும், 1.4.2013க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பண பலன்களை வழங்கிட வேண்டும், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆட்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்தும் இந்தப் பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளை தலைவர் அப்துல் ஜாஃபர், மண்டலத் துணைத் தலைவர் ராமசாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...