தாராபுரத்தில் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் - 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு!

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மாநாடு, சென்னையில் வரும் 14ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க கோரியும் தாராபுரத்தில் சிபிஎம் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.


திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மார்ச் 14ஆம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும் 10 அம்ச கோரிக்கைகள் குறித்தும் தாராபுரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

அப்போது, அரசு போக்குவரத்தை பலப்படுத்தவும், பாதுகாத்து வரவும் செலவுக்கு இடைப்பட்ட தொகையை ஈடுகட்ட தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வாங்கிட வேண்டும், பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்ய உதவி பாகங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகை 10,000 கோடியை அரசு திரும்ப வழங்க வேண்டும், 1.4.2013க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பண பலன்களை வழங்கிட வேண்டும், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆட்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்தும் இந்தப் பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளை தலைவர் அப்துல் ஜாஃபர், மண்டலத் துணைத் தலைவர் ராமசாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...