எங்களையும் புடிச்சி உள்ளே போடுங்க ஏட்டய்யா..! - வால்பாறை காவல் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு

வால்பாறை காவல் நிலையத்திற்குள் நுழைந்த 8 காட்டு யானைகளை, போலீசார் சத்தமிட்டு விரட்டியதால் தேயிலை தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லையில் அமைந்து உள்ள மலுக்கைபாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நின்று அதிரப்பள்ளி பகுதிக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து இடையூறு செய்வது அடிக்கடி அரங்கேறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் மலுக்கைபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த எட்டு காட்டு யானைகள் வால்பாறை சாலையில் நடந்து வந்துள்ளது.



அப்பொழுது காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் யானைகள் வரும்பொழுது எதிரே வாகனம் வந்ததால் காட்டு யானைகள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.



சிறிது நேரம் காவல் நிலையத்தில் சுற்றிய யானைக் கூட்டத்தை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சத்தம் போட்டதால், தேயிலைத்தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.



காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் திடீரென யானைக் கூட்டம் நுழைந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடிக்கடி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...