எங்களையும் புடிச்சி உள்ளே போடுங்க ஏட்டய்யா..! - வால்பாறை காவல் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு

வால்பாறை காவல் நிலையத்திற்குள் நுழைந்த 8 காட்டு யானைகளை, போலீசார் சத்தமிட்டு விரட்டியதால் தேயிலை தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லையில் அமைந்து உள்ள மலுக்கைபாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நின்று அதிரப்பள்ளி பகுதிக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து இடையூறு செய்வது அடிக்கடி அரங்கேறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் மலுக்கைபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த எட்டு காட்டு யானைகள் வால்பாறை சாலையில் நடந்து வந்துள்ளது.



அப்பொழுது காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் யானைகள் வரும்பொழுது எதிரே வாகனம் வந்ததால் காட்டு யானைகள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.



சிறிது நேரம் காவல் நிலையத்தில் சுற்றிய யானைக் கூட்டத்தை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சத்தம் போட்டதால், தேயிலைத்தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.



காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் திடீரென யானைக் கூட்டம் நுழைந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடிக்கடி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...