கோவையில் மது வாங்குவதில் தகராறு - நண்பனை கத்தியால் குத்தியவர் கைது!

கோவை இடையர்பாளையம் மதுபான கடையில் எந்த மது வாங்கலாம் என்பதற்காக நடந்த தகராறில், நண்பர் நிக்சன் கழுத்தில் கத்தியால் தாக்கிய ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மதுபான கடையில் சரண்ராஜ், நிக்சன், விஷ்ணு, ரகுமான் நான்கு பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்பொழுது எந்த மது வாங்குவது என்று நிக்சன் மற்றும் ரகுமான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பாருக்கு வெளியே வந்த ரகுமான் மற்றும் நிக்சன் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு ரகுமான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்சன் தொண்டை பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிக்சனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, நான்கு நண்பர்களில் ஒருவரான சரண்ராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எந்த பிராண்ட் மது வாங்கலாம் என்ற தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...