கோவையில் மது வாங்குவதில் தகராறு - நண்பனை கத்தியால் குத்தியவர் கைது!

கோவை இடையர்பாளையம் மதுபான கடையில் எந்த மது வாங்கலாம் என்பதற்காக நடந்த தகராறில், நண்பர் நிக்சன் கழுத்தில் கத்தியால் தாக்கிய ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மதுபான கடையில் சரண்ராஜ், நிக்சன், விஷ்ணு, ரகுமான் நான்கு பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்பொழுது எந்த மது வாங்குவது என்று நிக்சன் மற்றும் ரகுமான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பாருக்கு வெளியே வந்த ரகுமான் மற்றும் நிக்சன் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு ரகுமான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்சன் தொண்டை பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிக்சனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, நான்கு நண்பர்களில் ஒருவரான சரண்ராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எந்த பிராண்ட் மது வாங்கலாம் என்ற தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...