கோவையில் மது வாங்குவதில் தகராறு - நண்பனை கத்தியால் குத்தியவர் கைது!

கோவை இடையர்பாளையம் மதுபான கடையில் எந்த மது வாங்கலாம் என்பதற்காக நடந்த தகராறில், நண்பர் நிக்சன் கழுத்தில் கத்தியால் தாக்கிய ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மதுபான கடையில் சரண்ராஜ், நிக்சன், விஷ்ணு, ரகுமான் நான்கு பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்பொழுது எந்த மது வாங்குவது என்று நிக்சன் மற்றும் ரகுமான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பாருக்கு வெளியே வந்த ரகுமான் மற்றும் நிக்சன் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு ரகுமான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்சன் தொண்டை பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிக்சனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, நான்கு நண்பர்களில் ஒருவரான சரண்ராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எந்த பிராண்ட் மது வாங்கலாம் என்ற தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...