கோவையில் மது வாங்குவதில் தகராறு - நண்பனை கத்தியால் குத்தியவர் கைது!

கோவை இடையர்பாளையம் மதுபான கடையில் எந்த மது வாங்கலாம் என்பதற்காக நடந்த தகராறில், நண்பர் நிக்சன் கழுத்தில் கத்தியால் தாக்கிய ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மதுபான கடையில் சரண்ராஜ், நிக்சன், விஷ்ணு, ரகுமான் நான்கு பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்பொழுது எந்த மது வாங்குவது என்று நிக்சன் மற்றும் ரகுமான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பாருக்கு வெளியே வந்த ரகுமான் மற்றும் நிக்சன் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு ரகுமான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்சன் தொண்டை பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிக்சனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, நான்கு நண்பர்களில் ஒருவரான சரண்ராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எந்த பிராண்ட் மது வாங்கலாம் என்ற தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...