கோவையில் சாலிடாரிட்டி அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம்

சாலிடாரிட்டி அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைந்தது. இதைதொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: சாலிடாரிட்டி அமைப்பு சார்பில் சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.

சாலிடாரிட்டி அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைந்தது. அதன் நிறைவு பொதுக்கூட்டம், கோவை கரும்புகடையில் நடைபெற்றது.



சமூக தலைவர்கள், ஆன்றோர் பெருமக்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட கோவை ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ ஆல்சோ தேவாலயத்தின் தலைமை பாதிரியார் சார்லஸ் வின்சென்ட் பேசுகையில், காலச் சூழலுக்கேற்ப நமது மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.



நமது முன்னோர்கள் சொல்லும் கதையைக்கூட அதே பாணியில் காலங்காலமாக கூறாமல் அக் கதையைக் கூட இன்றையக் காலச்சூழலுக்கேற்றார் போல பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்.

சாலிடாரிட்டி அமைப்பு சமூக ஒற்றுமைப் பிரச்சாரம் தமிழகமெங்கும் சுற்றி இன்று கோவையில் நிறைவு செய்துள்ளது. உங்களை மனமார வாழ்த்துகிறேன்.



மனித நேயத்தோடு ஒற்றுமை அன்பு போன்றவற்றைக் கொண்டு வகுப்பு துவேசங்களை விரட்டவேண்டும். உங்களோடு நாங்கள் என்றென்றும் இருப்போம் என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...