கோவையில் சாலிடாரிட்டி அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம்

சாலிடாரிட்டி அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைந்தது. இதைதொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: சாலிடாரிட்டி அமைப்பு சார்பில் சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.

சாலிடாரிட்டி அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைந்தது. அதன் நிறைவு பொதுக்கூட்டம், கோவை கரும்புகடையில் நடைபெற்றது.



சமூக தலைவர்கள், ஆன்றோர் பெருமக்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட கோவை ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ ஆல்சோ தேவாலயத்தின் தலைமை பாதிரியார் சார்லஸ் வின்சென்ட் பேசுகையில், காலச் சூழலுக்கேற்ப நமது மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.



நமது முன்னோர்கள் சொல்லும் கதையைக்கூட அதே பாணியில் காலங்காலமாக கூறாமல் அக் கதையைக் கூட இன்றையக் காலச்சூழலுக்கேற்றார் போல பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்.

சாலிடாரிட்டி அமைப்பு சமூக ஒற்றுமைப் பிரச்சாரம் தமிழகமெங்கும் சுற்றி இன்று கோவையில் நிறைவு செய்துள்ளது. உங்களை மனமார வாழ்த்துகிறேன்.



மனித நேயத்தோடு ஒற்றுமை அன்பு போன்றவற்றைக் கொண்டு வகுப்பு துவேசங்களை விரட்டவேண்டும். உங்களோடு நாங்கள் என்றென்றும் இருப்போம் என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...