நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்..! - கோவையில் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேச்சு

தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், ஈரோட்டில் மக்களை கூண்டுகளில் அடைத்து வைத்து திமுக இடைத்தேர்தலில் பெற்றிபெற்றுள்ளதாக, கோவை இடிகரையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை இடிகரை பகுதியில் அ இ அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, ஈரோட்டில் மக்களை கூண்டில் அடைத்து திமுக வெற்றி பெற்றது. கோவையில் 50 ஆண்டுகளில் செய்யக்கூடிய வளர்ச்சியை 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்து முடித்தோம்.

கோவையில் உள்ள அனைத்து மேம்பாலம், சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் செய்தோம். திமுக ஆட்சியில் சாலைகளை தோண்டி மட்டுமே போட்டுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும், என்றார்.



தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக திரைப்பட நடிகர் வையாபுரி கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், சிலம்பத்தில் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



மேலும், 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...