சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - பொதுமக்கள் அச்சம்!

கோவை மாநகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடுமையான வெயில் காரணமாக கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில், 15.90 அடியாக குறைந்துள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில், பாதுகாப்பு கருதி கேரள அரசு 45 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்கிறது. இதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டாமல் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை தென்மேற்கு பருவமழை நன்றாகப் பெய்ததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் சென்றது. அதன் பிறகு, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நீர்மட்ட ம் குறைக்கப்பட்டது.



இதனிடையே சிறுவாணி அணையின் நீர்மட் டம் 35 அடி முதல் 40 அடி வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த வாரங்களில் 20 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது, 15.90 அடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு 6.30 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...