தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கேள்வி, பதில் போட்டி

தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் தலைவர் உமர் பாரூக் தலைமையில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கேள்வி பதில் போட்டி ஏன் என்ற தலைப்பில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் உரையாற்றினார்.

இதேபோல், சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான், மறுமை நாள் என்ற தலைப்பில் ஜமாத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அல்தாபி ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...