தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கேள்வி, பதில் போட்டி

தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் தலைவர் உமர் பாரூக் தலைமையில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கேள்வி பதில் போட்டி ஏன் என்ற தலைப்பில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் உரையாற்றினார்.

இதேபோல், சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான், மறுமை நாள் என்ற தலைப்பில் ஜமாத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அல்தாபி ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...