தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கேள்வி, பதில் போட்டி

தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் தலைவர் உமர் பாரூக் தலைமையில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கேள்வி பதில் போட்டி ஏன் என்ற தலைப்பில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் உரையாற்றினார்.

இதேபோல், சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான், மறுமை நாள் என்ற தலைப்பில் ஜமாத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அல்தாபி ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...