உடுமலையில் பேருந்தை மறித்து கண்ணாடியை உடைத்த 'படையப்பா' யானை - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணாறு சாலையில் நள்ளிரவில் வந்த பேருந்தை வழிமறித்த ‘படையப்பா' யானை, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கிவிட்டு சென்றது. இதை பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரளா எல்லை பகுதியான மறையூர் பகுதியில்படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலம். மறையூர் மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக இந்த யானை அவ்வப்போது உலாவரும்.

குறிப்பாகபொதுமக்கள் நடமாடும் பேருந்து நிலையம், தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை இந்த படையப்பா யானை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் படையப்பா யானை செயல்படுகிறது.



இதற்கிடையில், உடுமலை மறையூர் சாலையில் நள்ளிரவு திருவனந்தபுரத்தில் இருந்து பழநி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தை படையப்பா காட்டுயானை திடீரென வழிமறித்தது.



பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கியது. ஆனால் டிரைவர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பேருந்தைஇயக்கி கடந்து சென்றார்.



இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...