கோவையில் 50 பந்தய புறாக்கள் திருட்டு - வெளிமாநிலத்தில் விற்க முயற்சியா? என விசாரணை

கோவை போத்தனூரில் வீட்டின் மொட்டை மாடியில் ரகு என்பவர் வளர்த்து வந்த 50-க்கும் மேற்பட்ட பந்தயப் புறாக்கள் மற்றும் 4 சேவல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் ரகு (வயது25). இவர் தனது வீட்டு மாடியில் புறா மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் அனைத்தும் பந்தய புறாக்கள். இந்த நிலையில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் புறா கூண்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பந்தய புறாக்களை திருடி சென்றனர்.

மேலும், அங்கிருந்த நான்கு சேவல்களையும் திருடி சென்றுள்ளனர். காலையில் வழக்கம்போல் புறாவுக்கு தண்ணீர் வைக்கவும், இரை போடவும் ரகு சென்று பார்த்தபோது புறா மற்றும் சேவல் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் காவல் நிலைய போலீசார் புறா திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடப்பட்ட புறா மற்றும் சேவல்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனத் தெரியவந்துள்ளது. பந்தய புறாக்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், அந்த நோக்கத்தில் இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...