கோவையில் 50 பந்தய புறாக்கள் திருட்டு - வெளிமாநிலத்தில் விற்க முயற்சியா? என விசாரணை

கோவை போத்தனூரில் வீட்டின் மொட்டை மாடியில் ரகு என்பவர் வளர்த்து வந்த 50-க்கும் மேற்பட்ட பந்தயப் புறாக்கள் மற்றும் 4 சேவல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் ரகு (வயது25). இவர் தனது வீட்டு மாடியில் புறா மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் அனைத்தும் பந்தய புறாக்கள். இந்த நிலையில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் புறா கூண்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பந்தய புறாக்களை திருடி சென்றனர்.

மேலும், அங்கிருந்த நான்கு சேவல்களையும் திருடி சென்றுள்ளனர். காலையில் வழக்கம்போல் புறாவுக்கு தண்ணீர் வைக்கவும், இரை போடவும் ரகு சென்று பார்த்தபோது புறா மற்றும் சேவல் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் காவல் நிலைய போலீசார் புறா திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடப்பட்ட புறா மற்றும் சேவல்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனத் தெரியவந்துள்ளது. பந்தய புறாக்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், அந்த நோக்கத்தில் இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...