சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமென சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் பேட்டி


தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தற்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாஜக அரசினால் நடத்தப்படுபவை என குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது சட்டமன்றத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு இல்லை எனவும், தற்போது முதலமைச்சர் பொறுப்பு என்பது மலர்கீரிடம் அல்ல, அது முட்கீரிடம் எனவும் அவர் கூறினார்.

மேலும், இனிமே தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது எனவும், தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டுமெனவும் கூறிய அவர், ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமால் எப்படி வாக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிருபீக்கப்பட்டு இருக்குமெனவும் தெரிவித்தார். மேலும், எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலனை தவிர தனக்கு எதுவும் இல்லை என நற்பெயர் எடுப்பதே தனது நோக்கம் எனவும், பணம் சேர்ப்பது அல்ல என மக்களை திருப்தி படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமெனவும், முதலமைச்சர் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தா.பாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...