கோவையில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த லாரியின் பேட்டரியை திருடிய இளைஞர் கைது!

கோவை ஆத்துப்பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிய இளைஞரை லாரி உரிமையாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.


கோவை: கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் பங்கி நின்றிருந்த லாரியில் பேட்டரியை திருடி விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆத்துப்பாலம் அருகேயுள்ள குறிச்சி பிரிவு என்.பி.இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஜபாருல்லா (35). இவர் சொந்தமாக லாரி வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதேபோல கடந்த 20 நாட்களாக பெட்ரோல் பங்கில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு லாரியில் இருந்து சிலர் பொருட்களை எடுப்பதாக ஜபாருல்லாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் வந்து பார்த்தபோது மூன்று இளைஞர்கள் லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பிச்சென்றனர்.

பிடிபட்ட நபரை ஜபாருல்லா குனியமுத்தூர் போலீஸில் ஒப்படைந்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கரும்புக்கடையை சேர்ந்த ரிஸ்வான் சுகைல் (24) என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து லாரி பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற முகமது செரீப், அப்சல் ரகுமான் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...