கோவையில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த லாரியின் பேட்டரியை திருடிய இளைஞர் கைது!

கோவை ஆத்துப்பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிய இளைஞரை லாரி உரிமையாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.


கோவை: கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் பங்கி நின்றிருந்த லாரியில் பேட்டரியை திருடி விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆத்துப்பாலம் அருகேயுள்ள குறிச்சி பிரிவு என்.பி.இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஜபாருல்லா (35). இவர் சொந்தமாக லாரி வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதேபோல கடந்த 20 நாட்களாக பெட்ரோல் பங்கில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு லாரியில் இருந்து சிலர் பொருட்களை எடுப்பதாக ஜபாருல்லாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் வந்து பார்த்தபோது மூன்று இளைஞர்கள் லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பிச்சென்றனர்.

பிடிபட்ட நபரை ஜபாருல்லா குனியமுத்தூர் போலீஸில் ஒப்படைந்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கரும்புக்கடையை சேர்ந்த ரிஸ்வான் சுகைல் (24) என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து லாரி பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற முகமது செரீப், அப்சல் ரகுமான் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...