கோவையில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த லாரியின் பேட்டரியை திருடிய இளைஞர் கைது!

கோவை ஆத்துப்பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிய இளைஞரை லாரி உரிமையாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.


கோவை: கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் பங்கி நின்றிருந்த லாரியில் பேட்டரியை திருடி விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆத்துப்பாலம் அருகேயுள்ள குறிச்சி பிரிவு என்.பி.இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஜபாருல்லா (35). இவர் சொந்தமாக லாரி வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதேபோல கடந்த 20 நாட்களாக பெட்ரோல் பங்கில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு லாரியில் இருந்து சிலர் பொருட்களை எடுப்பதாக ஜபாருல்லாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் வந்து பார்த்தபோது மூன்று இளைஞர்கள் லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பிச்சென்றனர்.

பிடிபட்ட நபரை ஜபாருல்லா குனியமுத்தூர் போலீஸில் ஒப்படைந்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கரும்புக்கடையை சேர்ந்த ரிஸ்வான் சுகைல் (24) என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து லாரி பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற முகமது செரீப், அப்சல் ரகுமான் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...