கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி - 3ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது!

கோவையில் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் என்ற பெயரில், நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரொனால்ட் ரீகன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.80லட்சம் மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ்-1 சிட்கோ என்ற முகவரியில், கொங்கு நாடு அன்னை சீட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அதிக வட்டிதருவதாக கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் 40க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் ஏலச்சீட்டு போட்டு இருந்தனர். ஆனால் நிறுவன தரப்பில் அவர்கள் தெரிவித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஏலச்சீட்டு தவணைக் காலம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்ந்து பணம் தராமல் தாமதித்து ஏமாற்றி இருக்கின்றனர்.

இதனால் பணத்தைப் பறிகொடுத்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாக இயக்குநர்களான ரொனால்டு ரீகன், டேவிட் சாமுவேல், ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது 2021 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 120 பி, 406, 420, TEPID வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் மூன்று ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ரொனால்ட் ரீகனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த மோசடி வழக்கில் முன்னதாக டேவிட் சாமுவேல் கைதாகி இருந்த நிலையில், ராஜேந்திரன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...