தாராபுரத்தில் புதிய வணிக வளாக கட்டிட பணி துவக்க விழா - பூமிபூஜை செய்து வைத்த அமைச்சர்கள்

தாராபுரம் அருகே ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் புதிய வணிக வளாக கட்டிட பணிகள் துவக்க விழாவில் அமைச்சர்கள், மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் புதிய வணிக வளாக கட்டிட பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள கட்டிட பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில், தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பூர் நகராட்சி 4ம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன். நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தாராபுரம் நகராட்சி 19வது வார்டு பகுதியில் தினசரி மார்க்கெட் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.



இதில் இட நெருக்கடியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மழை காலங்களில் தண்ணீர் மார்க்கெட்டுக்குள் தேங்கி நின்று வியாபாரத்தை பாதிப்படைய செய்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் புதிய 55 கடைகள் கட்டப்பட உள்ளது.



இதற்கான கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் ராமர், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகர கழக தலைவர் கதிரவன், நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின், நகரப் பொருளாளர் கபடி சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் யூசுப், சீனிவாசன், அய்யப்பன், பைக் செந்தில்குமார்.

நகராட்சி கவுன்சிலர்கள் துரை. சந்திரசேகர், இராஜேந்திரன், முரட்டாண்டி, ஸ்ரீதரன், ராஜாத்தி பாண்டியன், சாந்தி இளங்கோ, முத்துலட்சுமி பழனிச்சாமி, உஷாணா பானு, சேக்பரித், சாஜிதா பானு அகமது பாஷா, உமா மகேஸ்வரி, ஹரிஹரசுதன், மலர்வழி கணேசன், தனலட்சுமி அய்யப்பன், ஷாலினி பவர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...