கோவை வேளாண் பல்கலையில் வேளாண் தொழில் முனைவோருக்கான 2 நாள் பயிற்சி!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சியில் தர்மபுரியை சேர்ந்த 21 தொழில்முனைவோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் வேளாண் தொழில்முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வணிகத்துறை சார்பில், தொழில்‌ முனைவோருக்கு வேளாண்‌ தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்‌ நுட்பவணிக காப்பகம்‌, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் கடந்த மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி நடைபெற்றது.



இதில் வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குநர்‌, முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌,‌ பயிற்சியை துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகளை குறித்து விரிவுரை வழங்கினார்‌.



தொழில்‌ நுட்பவணிக காப்பக தலைமை செயல்‌ அதிகாரி ஞானசம்பந்தம்‌, வரவேற்புரையாற்றினார்‌. விவசாய மற்றும்‌ கிராமப்புற மேலாண்மை இணைப்‌ பேராசிரியர் மலர்கொடி நன்றியுரை ஆற்றினார்‌.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேளாண்‌ மற்றும்‌ வேளாண்‌ சார்ந்த துறைகளிலிருந்து 21 தொழில்‌ முனைவோர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கு பெற்றனர்‌.

வணிகத்திட்டம்‌ தயாரித்தல்‌, வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம்‌, தொழில்‌ நுட்பவணிக காப்பகத்தின்‌ செயல்பாடுகள்‌, வணிகம்‌ சார்ந்த சேவைகள்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ மதிப்பு கூட்டல்‌ போன்ற தலைப்புகளை மையமாகக்‌ கொண்டு இப்பயிற்சியானது நடைபெற்றது.

தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ தங்களின்‌ தொழில்‌ முனைவோர்‌ பயணத்தை பயிற்சியாளர்களிடம்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

இப்பயிற்சிக்குபின்‌ இறுதியில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலான கடனுதவியும்‌ ரூ.2.00 லட்சம்‌ வரையிலான மானியமும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌.

மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ இவ்வகை பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ தொழில்நுட்ப உதவியுடன்‌ தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...