உடுமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்ககோரி சின்ன வாளவாடியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வாளவாடி - தளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 2000-க்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக, இந்த பகுதி மக்கள் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.



இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பூலாங்கிணறு குடிநீர் திட்டம் கைவிடுவதை எதிர்த்தும், நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், சின்னவாளவாடி கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் வாளவாடி-தளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...