உடுமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்ககோரி சின்ன வாளவாடியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வாளவாடி - தளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 2000-க்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக, இந்த பகுதி மக்கள் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.



இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பூலாங்கிணறு குடிநீர் திட்டம் கைவிடுவதை எதிர்த்தும், நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், சின்னவாளவாடி கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் வாளவாடி-தளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...