பல்லடம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் செல்வம் என்பவரின் பஞ்சு ஆலையின் இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக எற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.


திருப்பூர்: திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் செல்வம் டெக்ஸ் என்ற பஞ்சாலையை நடத்தி வருகிறார். இன்று மாலை 6 மணியளவில் ஆலையிலிருந்த இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றத் தொடங்கியது.



சிறிது நேரத்தில் தீ மளமளவென இயந்திரத்தின் அருகே இருந்த பஞ்சுகளுக்கு பரவியதால், ஆலையின் ஒரு பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இதைப்பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...