பல்லடம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் செல்வம் என்பவரின் பஞ்சு ஆலையின் இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக எற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.


திருப்பூர்: திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் செல்வம் டெக்ஸ் என்ற பஞ்சாலையை நடத்தி வருகிறார். இன்று மாலை 6 மணியளவில் ஆலையிலிருந்த இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றத் தொடங்கியது.



சிறிது நேரத்தில் தீ மளமளவென இயந்திரத்தின் அருகே இருந்த பஞ்சுகளுக்கு பரவியதால், ஆலையின் ஒரு பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இதைப்பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...