பல்லடம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் செல்வம் என்பவரின் பஞ்சு ஆலையின் இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக எற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.


திருப்பூர்: திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் செல்வம் டெக்ஸ் என்ற பஞ்சாலையை நடத்தி வருகிறார். இன்று மாலை 6 மணியளவில் ஆலையிலிருந்த இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றத் தொடங்கியது.



சிறிது நேரத்தில் தீ மளமளவென இயந்திரத்தின் அருகே இருந்த பஞ்சுகளுக்கு பரவியதால், ஆலையின் ஒரு பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இதைப்பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...