கோவையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கோவையில் ஒரே நாளில் ஆர்.எஸ்.புரம், பீளமேடு, காட்டூர் பகுதிகளில் நிறுத்திவிட்டு சென்ற 4 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம், வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன திருட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஆர் எஸ் புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள டிரேடிங் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு இரவுதான் தங்கியிருக்கும் அடுக்குமாடி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார்.பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முகேஷ் பட்டேல் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது பைக் கொள்ளையன் ஒருவன், பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



இதேபோன்று பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கே.எம். சி.ஹெச் மருத்துவமனை எதிரே, தனியார் நிறுவன ஊழியர் கதிரவன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கதிரவன் தந்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் துணிக்கடை ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் என்பவரது வாகனத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அஜித்குமார் தந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், பீளமேடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே தினக்கூலி தொழிலாளி தினேஷ் என்பவரின் பைக்கும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து தினேஷ் வந்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

கோவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நான்கு பைக்குகள் திருடுப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புடன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் திருடப்பட்டுள்ளதால், பைக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...