கோவையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கோவையில் ஒரே நாளில் ஆர்.எஸ்.புரம், பீளமேடு, காட்டூர் பகுதிகளில் நிறுத்திவிட்டு சென்ற 4 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம், வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன திருட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஆர் எஸ் புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள டிரேடிங் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு இரவுதான் தங்கியிருக்கும் அடுக்குமாடி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார்.பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முகேஷ் பட்டேல் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது பைக் கொள்ளையன் ஒருவன், பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



இதேபோன்று பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கே.எம். சி.ஹெச் மருத்துவமனை எதிரே, தனியார் நிறுவன ஊழியர் கதிரவன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கதிரவன் தந்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் துணிக்கடை ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் என்பவரது வாகனத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அஜித்குமார் தந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், பீளமேடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே தினக்கூலி தொழிலாளி தினேஷ் என்பவரின் பைக்கும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து தினேஷ் வந்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

கோவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நான்கு பைக்குகள் திருடுப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புடன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் திருடப்பட்டுள்ளதால், பைக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...