கோவையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கோவையில் ஒரே நாளில் ஆர்.எஸ்.புரம், பீளமேடு, காட்டூர் பகுதிகளில் நிறுத்திவிட்டு சென்ற 4 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம், வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன திருட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஆர் எஸ் புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள டிரேடிங் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு இரவுதான் தங்கியிருக்கும் அடுக்குமாடி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார்.பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முகேஷ் பட்டேல் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது பைக் கொள்ளையன் ஒருவன், பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



இதேபோன்று பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கே.எம். சி.ஹெச் மருத்துவமனை எதிரே, தனியார் நிறுவன ஊழியர் கதிரவன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கதிரவன் தந்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் துணிக்கடை ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் என்பவரது வாகனத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அஜித்குமார் தந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், பீளமேடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே தினக்கூலி தொழிலாளி தினேஷ் என்பவரின் பைக்கும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து தினேஷ் வந்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

கோவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நான்கு பைக்குகள் திருடுப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புடன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் திருடப்பட்டுள்ளதால், பைக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...