கோவையில் கூண்டோடு சிக்கிய சீட்டாட்ட கும்பல் - போத்தனூர் போலீசார் அதிரடி!

கோவை போத்தனூர் விட்டல் நகர் மற்றும் செட்டிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சீட்டு கட்டுகள், 58,300 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: ரம்மி உள்ளிட்ட சீட்டு ஆடுவது சட்டப்படி குற்றம் . இவ்வாறு சீட்டு ஆடுவதனால் பலர் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். சீட்டாட்டத்துக்கு அடிமையானவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அடமானம் வைத்துக் கூட சீட்டு ஆடுகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இதுபோன்ற, கும்பலை ஒடுக்கும் பொருட்டு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு, சீட்டாட்ட கும்பல்களை கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை போத்தனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்பொழுது சீட்டு ஆடியவர்களை கூண்டோடு கைது செய்திருக்கின்றனர்.

கோவை போத்தனூர் விட்டல் நகர் பகுதியில் உள்ள செட் ஒன்றில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது, ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ரவிக்குமார், மணி, கார்த்திக், விஜயகுமார், வெங்கடேசன், சிவக்குமார், முனியப்பன், பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கட்டு சீட்டு மற்றும் 32 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று போத்தனூர் பகுதியில் உள்ள செட்டிபாளையம் பிரிவு பகுதியில் சீட் ஆடிக் கொண்டிருந்த விஜயகுமார், ராஜு, அப்துல் ஹக்கீம், இப்ராஹிம், பாஸ்கர், செல்வம், பரமசிவம், பாண்டி, பைசல் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போத்தனூர் போலீசார், அவர்களிடமிருந்து இருந்து 5 கட்டு சீட்டு கட்டு மற்றும் 25 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் டிரைவர்கள், கூலி தொழிலாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று, தொடர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...