கோவையில் கூண்டோடு சிக்கிய சீட்டாட்ட கும்பல் - போத்தனூர் போலீசார் அதிரடி!

கோவை போத்தனூர் விட்டல் நகர் மற்றும் செட்டிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சீட்டு கட்டுகள், 58,300 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: ரம்மி உள்ளிட்ட சீட்டு ஆடுவது சட்டப்படி குற்றம் . இவ்வாறு சீட்டு ஆடுவதனால் பலர் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். சீட்டாட்டத்துக்கு அடிமையானவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அடமானம் வைத்துக் கூட சீட்டு ஆடுகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இதுபோன்ற, கும்பலை ஒடுக்கும் பொருட்டு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு, சீட்டாட்ட கும்பல்களை கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை போத்தனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்பொழுது சீட்டு ஆடியவர்களை கூண்டோடு கைது செய்திருக்கின்றனர்.

கோவை போத்தனூர் விட்டல் நகர் பகுதியில் உள்ள செட் ஒன்றில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது, ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ரவிக்குமார், மணி, கார்த்திக், விஜயகுமார், வெங்கடேசன், சிவக்குமார், முனியப்பன், பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கட்டு சீட்டு மற்றும் 32 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று போத்தனூர் பகுதியில் உள்ள செட்டிபாளையம் பிரிவு பகுதியில் சீட் ஆடிக் கொண்டிருந்த விஜயகுமார், ராஜு, அப்துல் ஹக்கீம், இப்ராஹிம், பாஸ்கர், செல்வம், பரமசிவம், பாண்டி, பைசல் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போத்தனூர் போலீசார், அவர்களிடமிருந்து இருந்து 5 கட்டு சீட்டு கட்டு மற்றும் 25 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் டிரைவர்கள், கூலி தொழிலாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று, தொடர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...