கோவையில் கூண்டோடு சிக்கிய சீட்டாட்ட கும்பல் - போத்தனூர் போலீசார் அதிரடி!

கோவை போத்தனூர் விட்டல் நகர் மற்றும் செட்டிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சீட்டு கட்டுகள், 58,300 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: ரம்மி உள்ளிட்ட சீட்டு ஆடுவது சட்டப்படி குற்றம் . இவ்வாறு சீட்டு ஆடுவதனால் பலர் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். சீட்டாட்டத்துக்கு அடிமையானவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அடமானம் வைத்துக் கூட சீட்டு ஆடுகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இதுபோன்ற, கும்பலை ஒடுக்கும் பொருட்டு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு, சீட்டாட்ட கும்பல்களை கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை போத்தனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்பொழுது சீட்டு ஆடியவர்களை கூண்டோடு கைது செய்திருக்கின்றனர்.

கோவை போத்தனூர் விட்டல் நகர் பகுதியில் உள்ள செட் ஒன்றில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது, ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ரவிக்குமார், மணி, கார்த்திக், விஜயகுமார், வெங்கடேசன், சிவக்குமார், முனியப்பன், பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கட்டு சீட்டு மற்றும் 32 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று போத்தனூர் பகுதியில் உள்ள செட்டிபாளையம் பிரிவு பகுதியில் சீட் ஆடிக் கொண்டிருந்த விஜயகுமார், ராஜு, அப்துல் ஹக்கீம், இப்ராஹிம், பாஸ்கர், செல்வம், பரமசிவம், பாண்டி, பைசல் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போத்தனூர் போலீசார், அவர்களிடமிருந்து இருந்து 5 கட்டு சீட்டு கட்டு மற்றும் 25 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் டிரைவர்கள், கூலி தொழிலாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று, தொடர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...