கோவையில் கூண்டோடு சிக்கிய சீட்டாட்ட கும்பல் - போத்தனூர் போலீசார் அதிரடி!

கோவை போத்தனூர் விட்டல் நகர் மற்றும் செட்டிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சீட்டு கட்டுகள், 58,300 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: ரம்மி உள்ளிட்ட சீட்டு ஆடுவது சட்டப்படி குற்றம் . இவ்வாறு சீட்டு ஆடுவதனால் பலர் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். சீட்டாட்டத்துக்கு அடிமையானவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அடமானம் வைத்துக் கூட சீட்டு ஆடுகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இதுபோன்ற, கும்பலை ஒடுக்கும் பொருட்டு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு, சீட்டாட்ட கும்பல்களை கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை போத்தனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்பொழுது சீட்டு ஆடியவர்களை கூண்டோடு கைது செய்திருக்கின்றனர்.

கோவை போத்தனூர் விட்டல் நகர் பகுதியில் உள்ள செட் ஒன்றில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது, ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ரவிக்குமார், மணி, கார்த்திக், விஜயகுமார், வெங்கடேசன், சிவக்குமார், முனியப்பன், பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கட்டு சீட்டு மற்றும் 32 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று போத்தனூர் பகுதியில் உள்ள செட்டிபாளையம் பிரிவு பகுதியில் சீட் ஆடிக் கொண்டிருந்த விஜயகுமார், ராஜு, அப்துல் ஹக்கீம், இப்ராஹிம், பாஸ்கர், செல்வம், பரமசிவம், பாண்டி, பைசல் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போத்தனூர் போலீசார், அவர்களிடமிருந்து இருந்து 5 கட்டு சீட்டு கட்டு மற்றும் 25 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் டிரைவர்கள், கூலி தொழிலாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று, தொடர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...