கொடநாடு கொலை வழக்கு - செல்போன் எண்களை தீவிரமாக ஆராயும் சிபிசிஐடி!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, அந்த மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு பதிவான செல்போன் எண்கள், பிற மாவட்டங்களுக்கு சென்ற அழைப்புகளை கண்டறியும் பணிகளை சிபிசிஐடி போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் கடந்த 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான போலீசார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதலாவதாக சம்பவம் நடந்த காலத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்த முரளிரம்பா-க்கு சமன் வழங்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு சாட்சியங்களை சிபிசிஐடி போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவம் நடந்த 2017ல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள் குறித்து இதுவரை நடந்த விசாரணையின்போது பதிவுகள் ஏதும் பெறப்படாத நிலையில், பிஎஸ்என்எல் செல்போன் தலைமை அலுவலகமான திருச்சி அலுவலகத்தில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு நீலகிரியில் பதிவான செல்போன் பதிவுகளை சேகரிக்கும் பணியை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தினர்.

முதல் கட்டமாக டேப் வடிவில் உள்ள அந்த பதிவுகளை டிஜிட்டலாக மாற்றி தகவல்களைப் பெறும் வகையில் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு பிறகு, சம்பவம் நடந்தபோது எந்தெந்த செல்போன் எண்கள் யார் யாருடன் இணைப்பில் இருந்தது மற்றும் சந்தேகப்படும் நபர்கள், வழக்கில் தொடர்புடைய நபர்களின் எண்கள் என முழுமையாக எடுத்து விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...