கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி உட்பட நான்கு பேர் கைது

ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கி அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நிறுவனத்தின் உரிமையாளரான சதாசிவம், அன்னபூரணி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொள்ளாச்சி- கோட்டூர் சாலை அருகே உள்ள அண்ணாமலையார் அவன்யூ பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அண்ட் கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சதாசிவம் சிட்பண்ட்ஸ் ஆகிய ஆறு நிதி நிறுவனங்களையும் சதாசிவம் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி, மணிகண்டன், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்தனர்.

இவர்களது நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 18 சதவீதம் வட்டி தருவதாகக் கூறியும், பல்வேறு விதமான ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பணத்தைப் பெற்றுள்ளனர்.



ஆனால் அவர்கள் தெரிவித்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், நான்கு பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...