கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி உட்பட நான்கு பேர் கைது

ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கி அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நிறுவனத்தின் உரிமையாளரான சதாசிவம், அன்னபூரணி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொள்ளாச்சி- கோட்டூர் சாலை அருகே உள்ள அண்ணாமலையார் அவன்யூ பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அண்ட் கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சதாசிவம் சிட்பண்ட்ஸ் ஆகிய ஆறு நிதி நிறுவனங்களையும் சதாசிவம் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி, மணிகண்டன், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்தனர்.

இவர்களது நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 18 சதவீதம் வட்டி தருவதாகக் கூறியும், பல்வேறு விதமான ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பணத்தைப் பெற்றுள்ளனர்.



ஆனால் அவர்கள் தெரிவித்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், நான்கு பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...