உடுமலையில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் வீணாகும் அவலம் - ஏலம் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், வெயில் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் சேதமாகி வருவதால், அதனை பராமரிக்க வேண்டும் அல்லது ஏலம் விட நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை காவல் உட்கோட்ட பகுதியில் உடுமலை காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கிராமங்கள் மற்றும் உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் உள்ளன.

இந்த சாலைகளில் நடைபெறும் வாகன விபத்துகள், குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்துக்கு முன்பும், தனியாருக்கு சொந்தமான இடத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இந்த வாகனங்கள் முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல் இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது. மீண்டும் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,

பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு முன்பும் தனியாருக்கு சொந்தமான நிலத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த வாகனங்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தாமல் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் அவை வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது.

அந்த வாகனங்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தாமல் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் அவை வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது.

இந்த வாகனங்கள் திருட்டு போக வாய்ப்புள்ளதுடன், தனியாருக்கு சொந்தமான இடத்தில் கேட்பாரற்று பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை போலீசாரும் கண்காணிப்பதில்லை. இதனால் மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் திருட்டு போவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பாதுகாப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதை உரிய முறையில் ஏலம் விட்டு அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதற்கு முன்வர எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...