திருப்பூர் அருகே சொத்துக்காக கொடுமைப்படுத்திய மகன் - காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!

திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவர், வீட்டை எழுதித் தருமாறு தன்னுடைய மகன் கார்த்தி அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மன்னரைப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. கணவர் இவரை விட்டு பிரிந்து 20 வருடங்களுக்கு முன்பே சென்றுவிட்டதால், மகன் கார்த்தியுடன் தங்கி கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களாக மன்னரையில், ராஜேஸ்வரி தங்கி உள்ள வீட்டை அவரது மகன் கார்த்தி, தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கூறி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ராஜேஸ்வரி உடன்படாததால் அவரது மகனும், உறவினர்கள் சிலரும் சேர்ந்து அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, பாதுகாப்பு வழங்கக்கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார் .இது குறித்து வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தாயை உறவினர்களுடன் சேர்த்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...