திருப்பூர் அருகே சொத்துக்காக கொடுமைப்படுத்திய மகன் - காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!

திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவர், வீட்டை எழுதித் தருமாறு தன்னுடைய மகன் கார்த்தி அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மன்னரைப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. கணவர் இவரை விட்டு பிரிந்து 20 வருடங்களுக்கு முன்பே சென்றுவிட்டதால், மகன் கார்த்தியுடன் தங்கி கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களாக மன்னரையில், ராஜேஸ்வரி தங்கி உள்ள வீட்டை அவரது மகன் கார்த்தி, தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கூறி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ராஜேஸ்வரி உடன்படாததால் அவரது மகனும், உறவினர்கள் சிலரும் சேர்ந்து அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, பாதுகாப்பு வழங்கக்கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார் .இது குறித்து வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தாயை உறவினர்களுடன் சேர்த்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...