திருமூர்த்தி அணையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணைப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் சூழ்ந்து மற்றும் சேதம் அடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் வண்ண மீன் காட்சியகம், சிறுவர் பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.



இதில் நீச்சல் குளம் மட்டும் தற்போது வரையிலும் செயல்பாட்டிலிருந்து வருகிறது. சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்தும், அதில் உள்ள உபகரணங்கள் மற்றும் விலங்குகளின் சிலைகள் சேதம் அடைந்தும் உள்ளன.



அதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப் பணமும் வீணாகி வருகிறது.



எனவே திருமூர்த்தி அணை அருகே பூட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...