திருமூர்த்தி அணையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணைப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் சூழ்ந்து மற்றும் சேதம் அடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் வண்ண மீன் காட்சியகம், சிறுவர் பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.



இதில் நீச்சல் குளம் மட்டும் தற்போது வரையிலும் செயல்பாட்டிலிருந்து வருகிறது. சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்தும், அதில் உள்ள உபகரணங்கள் மற்றும் விலங்குகளின் சிலைகள் சேதம் அடைந்தும் உள்ளன.



அதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப் பணமும் வீணாகி வருகிறது.



எனவே திருமூர்த்தி அணை அருகே பூட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...