திருமூர்த்தி அணையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணைப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் சூழ்ந்து மற்றும் சேதம் அடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் வண்ண மீன் காட்சியகம், சிறுவர் பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.



இதில் நீச்சல் குளம் மட்டும் தற்போது வரையிலும் செயல்பாட்டிலிருந்து வருகிறது. சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்தும், அதில் உள்ள உபகரணங்கள் மற்றும் விலங்குகளின் சிலைகள் சேதம் அடைந்தும் உள்ளன.



அதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப் பணமும் வீணாகி வருகிறது.



எனவே திருமூர்த்தி அணை அருகே பூட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...