வால்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அணிவித்தார். நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் மோதிரத்தை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வழங்கினார்.



மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகங்களையும் பரிசாக வழங்கினர்.



பின்னர் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள நகராட்சி தாவரவியல் பூங்காவில் 70 மரக்கன்றுகளை நடவு செய்தனர். அதேபோல் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் செல்வம், நகராட்சி கவுன்சிலர் அன்பரசன், ராஜேஸ்வரி பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...