உடுமலை அரசு பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்

நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை விதைகளை விதைத்து குறுந்தோட்டம் அமைக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளியில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் குறு காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல் உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை விதைத்தனர்.



ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுக்கு உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், பாரதியார் நூற்றாண்டு மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் தலைமை தாங்கினர்.



கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை, விதைத்து குறுந்தோட்டம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர்.

இந்த காய்கறித்தோட்டத்தின் மூலம் கிடைக்கும் காய்கறிகளை மதிய சத்துணவுக்குப் பயன்படுத்துவதன் மூலம் தாங்களே விளைவித்த காய்கறிகளை தாங்களே உண்ணும் சந்தோஷம் மாணவிகளுக்குக் கிடைக்கும்.

அத்துடன் காய்கறித்தோட்டம் உருவாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு வீடுதோறும் காய்கறித் தோட்டம் அமைப்பதன் மூலம் சத்தான, புத்தம் புதிய, ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகளை அனைவரும் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் துறைத்தலைவர் பிருந்தா, ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, மணிமேகலை, ரம்யா, சத்யப்ரியா மற்றும் தமிழ்துறை மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...