கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாம் - ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கக்கடவு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்வில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 55 லட்சத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் கக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...