கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாம் - ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கக்கடவு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்வில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 55 லட்சத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் கக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...