முதல்வர் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தாராபுரம் நகர திமுக சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திமுக நகர இளைஞரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு அன்புநிதி என பெயர் சூட்டி பரிசு பெட்டகம் மற்றும் குழந்தையின் அம்மாவிற்கு சேலை மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து 2வது வார்டில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இதையடுத்து, நஞ்சம்பாளையம் சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, சிலேடு, பென்சில், மரக்கன்றுகள் ஆகியவற்றை திமுக நகர அவைத் தலைவர் கதிரவன் மற்றும் நகர துணைத் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

தாராபுரத்தில் உள்ள 30 வார்டு பகுதிகளிலும் திமுக கொடிகள் ஏற்றப்பட்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...