வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது..! - உடுமலை வனத்துறை அறிவுரை

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், விலங்குகளுக்கு தொந்தரவு அளிக்காமல் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னாறு சாலை, ஆனைமலை புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட வனப்ப குதியில் அமைந்துள்ளது. ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து துவங்கும் இந்த சாலை, மாநில எல்லையான சோதனைச்சாவடி வரை 20 கி.மீ. வரை உள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்புக்கருதி, வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில், ஆங்காங்கே விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள், வைக்கப்பட்டுள்ளன.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், வனவிலங்குகளை கண்டு களிக்க சுற்றுலாப்பயணியர் பலர், இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி மூணாறு சென்று திரும்புகின்றனர். அவர்களில் சிலர் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி மது அருந்துவதுடன், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவு பயன்படுத்திய பாலித்தீன் பைகளை வனப்பகுதியில் வீசிச்செல்வதாக புகார் எழுந்து உள்ளது.



வனத்தில் வறட்சி நிலவி வருவதால், காலை மற்றும் மாலை நேரத்தில், யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக, அமராவதி அணை நோக்கி செல்கின்றன. அப்போது, அவ்வழியே செல்லும் சுற்றுலாப்பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை மையப்படுத்தி, 'செல்பி எடுக்க முற்படுகின்றனர்.

அவ்வப்போது, யானை உள்ளிட்ட விலங்கினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அவர்களை துரத்தும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டுனர்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் கண்காணிப்பும் தீவிரமாக்கபட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...