வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது..! - உடுமலை வனத்துறை அறிவுரை

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், விலங்குகளுக்கு தொந்தரவு அளிக்காமல் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னாறு சாலை, ஆனைமலை புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட வனப்ப குதியில் அமைந்துள்ளது. ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து துவங்கும் இந்த சாலை, மாநில எல்லையான சோதனைச்சாவடி வரை 20 கி.மீ. வரை உள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்புக்கருதி, வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில், ஆங்காங்கே விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள், வைக்கப்பட்டுள்ளன.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், வனவிலங்குகளை கண்டு களிக்க சுற்றுலாப்பயணியர் பலர், இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி மூணாறு சென்று திரும்புகின்றனர். அவர்களில் சிலர் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி மது அருந்துவதுடன், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவு பயன்படுத்திய பாலித்தீன் பைகளை வனப்பகுதியில் வீசிச்செல்வதாக புகார் எழுந்து உள்ளது.



வனத்தில் வறட்சி நிலவி வருவதால், காலை மற்றும் மாலை நேரத்தில், யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக, அமராவதி அணை நோக்கி செல்கின்றன. அப்போது, அவ்வழியே செல்லும் சுற்றுலாப்பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை மையப்படுத்தி, 'செல்பி எடுக்க முற்படுகின்றனர்.

அவ்வப்போது, யானை உள்ளிட்ட விலங்கினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அவர்களை துரத்தும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டுனர்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் கண்காணிப்பும் தீவிரமாக்கபட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...