கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனை - வியாபாரிகள் 2 பேர் கைது!

கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வியாபாரிகள் மகாலிங்கபுரத்தை சேர்ந்த கிஷோர், தேனியை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது போலீசார் ரோந்து செல்வது வாடிக்கை. இந்த நிலையில், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் முள்ளுக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக இரண்டு நபர்கள் உலா வருவதைப் பார்த்தனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அந்த இரண்டு பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது.

இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரில், ஒருவர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பதும், மற்றொருவர் தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...