கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனை - வியாபாரிகள் 2 பேர் கைது!

கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வியாபாரிகள் மகாலிங்கபுரத்தை சேர்ந்த கிஷோர், தேனியை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது போலீசார் ரோந்து செல்வது வாடிக்கை. இந்த நிலையில், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் முள்ளுக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக இரண்டு நபர்கள் உலா வருவதைப் பார்த்தனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அந்த இரண்டு பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது.

இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரில், ஒருவர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பதும், மற்றொருவர் தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...