பூலாங்கிணர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் நீர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில் 4 நாட்களாக அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஊராட்சி அலுவலகத்தை நீர் சூழ்ந்துள்ளதாக குற்றசாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணர் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ள திருமூர்த்தி அணையின் மூலமாக உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தளி கால்வாயை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.



இந்த சூழலில் வாளவாடி பகுதியில் உள்ள பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,

அடிப்படை அத்தியாவசிய தேவையில் தண்ணீரின் பங்கு முக்கியமான ஒன்றாகும். பொது மக்களுக்கு தேவையான குடிநீரை அளித்து உதவுவதில் கூட்டு குடிநீர் திட்டங்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது.

ஆனால் அதற்காக பதிக்கப்பட்ட குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருவது வாடிக்கையாக உள்ளது. வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகே பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த நான்கு நாட்களாக ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது.

இந்த தண்ணீர் ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை சூழ்ந்து உள்ளது. இதனால் அலுவலகப் பயன்பாட்டுக்கு செல்லும் பொதுமக்கள் சேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தண்ணீர் வீணாகி வருவதால் பொது மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் சேதமடைந்த குழாயின் வழியாக கழிவுநீர் கலந்து செல்வதால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணையிலும் நீர்இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பாதுகாத்து கவனத்துடன் கையாள வேண்டிய தற்போதைய சூழலில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தண்ணீர் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது.

எனவே பெரியவாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் சேதம் அடைந்த பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டக் குழாயை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான தண்ணீர் விநியோகத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் குழாயில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...