கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது!

கோவையிலிருந்து கேரளாவிற்கு ஆம்னி வேனில் கடத்தப்பட்ட 1.5டன் ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 17வயது சிறுவன் உட்பட இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையிலிருந்து வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதைத் தடுக்க கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதனுள் சுமார் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் சுமார் 21 மூட்டைகள் தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் சாக்குப் பைகளில் இருந்தது.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், காளப்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவர், 17 வயது சிறுவனை உடன் வைத்துக் கொண்டு, ரேஷன் கடைகளில் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி கேரள மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட அரிசி சேரன் மாநகர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அதன் விற்பனையாளர் கோபாலன் என்பவர் மூலமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை பெற்று, அதனை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்திச் சென்றதும் அம்பலமானது.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆம்னி வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மற்றும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காளப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை விற்பனையாளர் கோபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...