பொள்ளாச்சி சந்தையில் வரத்து குறைவு - வாழை இலை விலை உயர்வு

பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள வார சந்தையில் வரத்துக் குறைவால் வாழை இலை விலை அதிகரித்துக் காணப்பட்டது. 7 ஆயிரம் இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் வாழை இலை வரத்துக்குறைவாக இருந்ததால், வாழை இலை கட்டின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள சந்தையின் ஒரு பகுதியில், வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வாழை இலை ஏலம் நடக்கிறது. வாழைத்தார் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு கொண்டு வரப்பட்டாலும், வாழை இலை அதிகபட்சமாக ஆனைமலை, சேத்துமடை, அம்பாரம்பாளையம், நெகமம், கோமங்கலம், ஆழியார், கோட்டூர், சமத்தூர், வடக்கிபாளையம், பொன்னாபுரம், ராமபட்டிணம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.



இதை உள்ளூர் மற்றும் கேரள பகுதி வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து ஏலம் மூலம் வாங்கி செல்கின்றனர். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் அதற்கு தகுந்தாற்போல வாழை இலை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் வாழை இலை அதிகளவு துளிர் விட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து அதிகரித்தது.

மேலும் விஷேச நாட்கள் ஒரளவு இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இந்த மாதத்தில் கடந்த 2 வாரமாக விஷேச நாட்கள் குறைவாக இருந்ததாலும், இரவு நேரத்தில் பனியும், பகல் நேரத்தில் கடுமையான வெயில் காரணமாகவும், பல இடங்களில் வாழைகள் வாடி வதங்கி காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில வாரமாக சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழை இலை கட்டுகளின் அளவு வெகுவாக குறைந்தது. நேற்று நடந்த ஏலத்தின் போது, வாழை இலை கட்டுகளின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் வாழை இலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாரந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் கொண்டு வரப்படும். ஆனால் 100க்கும் குறைவான இலை கட்டுகளே கொண்டு வரப்பட்டன. வாழை இலை வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் 7 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வாழை இலை அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதிலும் கேரள வியாபாரிகள் கலந்து கொண்டு இலைகட்டுகளை அதிகளவு வாங்கி சென்றதாக பொள்ளாச்சி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...