பொள்ளாச்சி சந்தையில் வரத்து குறைவு - வாழை இலை விலை உயர்வு

பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள வார சந்தையில் வரத்துக் குறைவால் வாழை இலை விலை அதிகரித்துக் காணப்பட்டது. 7 ஆயிரம் இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் வாழை இலை வரத்துக்குறைவாக இருந்ததால், வாழை இலை கட்டின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள சந்தையின் ஒரு பகுதியில், வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வாழை இலை ஏலம் நடக்கிறது. வாழைத்தார் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு கொண்டு வரப்பட்டாலும், வாழை இலை அதிகபட்சமாக ஆனைமலை, சேத்துமடை, அம்பாரம்பாளையம், நெகமம், கோமங்கலம், ஆழியார், கோட்டூர், சமத்தூர், வடக்கிபாளையம், பொன்னாபுரம், ராமபட்டிணம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.



இதை உள்ளூர் மற்றும் கேரள பகுதி வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து ஏலம் மூலம் வாங்கி செல்கின்றனர். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் அதற்கு தகுந்தாற்போல வாழை இலை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் வாழை இலை அதிகளவு துளிர் விட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து அதிகரித்தது.

மேலும் விஷேச நாட்கள் ஒரளவு இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இந்த மாதத்தில் கடந்த 2 வாரமாக விஷேச நாட்கள் குறைவாக இருந்ததாலும், இரவு நேரத்தில் பனியும், பகல் நேரத்தில் கடுமையான வெயில் காரணமாகவும், பல இடங்களில் வாழைகள் வாடி வதங்கி காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில வாரமாக சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழை இலை கட்டுகளின் அளவு வெகுவாக குறைந்தது. நேற்று நடந்த ஏலத்தின் போது, வாழை இலை கட்டுகளின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் வாழை இலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாரந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் கொண்டு வரப்படும். ஆனால் 100க்கும் குறைவான இலை கட்டுகளே கொண்டு வரப்பட்டன. வாழை இலை வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் 7 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வாழை இலை அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதிலும் கேரள வியாபாரிகள் கலந்து கொண்டு இலைகட்டுகளை அதிகளவு வாங்கி சென்றதாக பொள்ளாச்சி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...