கோவையில் ஏப்ரல் 8ஆம் தேதி சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை துவக்கம்!

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரி மைதானத்தில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியுள்ளது.


கோவை: கோவையில் வரும் எப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா தனியார் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 8ம் தேதி பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு ஆதித்யா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மௌனராகம் முரளி கூறியதாவது

ஏப்ரல் 8ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான Bookmyshow உள்பட பல்வேறு தளங்களில் துவங்கி உள்ளது. டிக்கெட்டின் விலை 500 முதல் 2000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட யார் மொத்தமாக புக்கிங் செய்தாலும் சிறப்புச் சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் முதல் முறையாக நடைபெறவுள்ள சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை இசைக்கலைஞர்கள் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...