கோவையில் ஏப்ரல் 8ஆம் தேதி சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை துவக்கம்!

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரி மைதானத்தில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியுள்ளது.


கோவை: கோவையில் வரும் எப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா தனியார் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 8ம் தேதி பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு ஆதித்யா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மௌனராகம் முரளி கூறியதாவது

ஏப்ரல் 8ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான Bookmyshow உள்பட பல்வேறு தளங்களில் துவங்கி உள்ளது. டிக்கெட்டின் விலை 500 முதல் 2000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட யார் மொத்தமாக புக்கிங் செய்தாலும் சிறப்புச் சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் முதல் முறையாக நடைபெறவுள்ள சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை இசைக்கலைஞர்கள் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...