கோவையில் ஏப்ரல் 8ஆம் தேதி சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை துவக்கம்!

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரி மைதானத்தில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியுள்ளது.


கோவை: கோவையில் வரும் எப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா தனியார் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 8ம் தேதி பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு ஆதித்யா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மௌனராகம் முரளி கூறியதாவது

ஏப்ரல் 8ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான Bookmyshow உள்பட பல்வேறு தளங்களில் துவங்கி உள்ளது. டிக்கெட்டின் விலை 500 முதல் 2000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட யார் மொத்தமாக புக்கிங் செய்தாலும் சிறப்புச் சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் முதல் முறையாக நடைபெறவுள்ள சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை இசைக்கலைஞர்கள் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...