கோவையில் ஆம்புலன்சிலேயே இளம்பெண்ணுக்கு பிரசவம் - பூமிக்கு வந்த அழகான தேவதை!

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண் ஷிவானிக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்ததால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஊழியர்களே பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே பிரசவ வலியில் துடித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரின் மனைவி ஷிவானி (22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது.

இதனால் மிகுந்த வலியில் துடித்த அவரை, 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், உக்கடம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது ஷிவானிக்கு வலி அதிகரித்தது.

குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ நிபுணர் தமிழ்செல்வம் சாலையோரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு பைலட் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

அப்போது ஷிவானிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் பிரசவ அவசரம் உணர்ந்து விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...